இதுவரை தெரியாமல் புஷ்பார்ச்சனை செய்துவிட்டபடியால் ஒரு தோஷமும் கிடையாது.
அபுத்திபூர்வக உத்ராகங்கள் என்ற ஒன்று உண்டு, அதாவது பரந்யாஸத்திற்குப் பின், புத்திக்குத் தெரியாமல் நாம் செய்யக்கூடிய பாபங்கள் – அபுத்திபூர்வமான அகங்கள் – அகங்கள் என்றால் பாபங்கள். அப்படி அபுத்திபூர்வக உத்ராகங்களுக்கு தோஷங்கள் ஒட்டாது. இதுவரை தெரியாமல் செய்ததினால் தோஷம் ஒட்டாது, இனிமேல் தெரிந்தபின் அக்காரியத்தைச் செய்யாமல் இருக்கவும்.

