அடியேன் அகத்தில் சாளக்கிராம பெருமாளுடன், சிறிய க்ருஷ்ணர் போன்ற விக்ரஹ எம்பெருமான்கள் எழுந்தருளியிருக்கின்றனர். அவர்கள் பக்கத்தில் வேறுஒரு சிறிய விக்ரஹம் இருந்தது மிகச்சிறியளவில் இருந்ததால் என்ன விக்ரஹமென்று தெரியாமல் எம்பெருமானுக்குச் சமர்ப்பிப்பதுபோல் புஷ்பாதிகள் சமர்ப்பித்து சேவித்தும் வந்தேன். இப்போதுதான் அது சரஸ்வதி விக்ரஹம் என்று தெரிய வந்தது இதனால் பரந்யாஸம் ஆன அடியேனுக்குத் தேவதந்தர தோஷம் ஏற்பட்டிருக்குமா ஸ்வாமி? ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?

இதுவரை தெரியாமல் புஷ்பார்ச்சனை செய்துவிட்டபடியால் ஒரு தோஷமும் கிடையாது.
அபுத்திபூர்வக உத்ராகங்கள் என்ற ஒன்று உண்டு, அதாவது பரந்யாஸத்திற்குப் பின், புத்திக்குத் தெரியாமல் நாம் செய்யக்கூடிய பாபங்கள் – அபுத்திபூர்வமான அகங்கள் – அகங்கள் என்றால் பாபங்கள். அப்படி அபுத்திபூர்வக உத்ராகங்களுக்கு தோஷங்கள் ஒட்டாது. இதுவரை தெரியாமல் செய்ததினால் தோஷம் ஒட்டாது, இனிமேல் தெரிந்தபின் அக்காரியத்தைச் செய்யாமல் இருக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top