சாளக்கிராம திருவாராதனை எப்படிச் செய்ய வேண்டும்? அடியேனின் ஆத்துக்காரர் தினமும் சாளக்கிராம மூர்த்திக்கு பால் தயிர் கொண்டு திருமஞ்சனம் மட்டும் செய்வார். முறையாக எப்படிச் செய்வது?

சாளக்கிராம திருவாராதனைக்கு நித்யம் பால் தயிர் இல்லாவிட்டால், வெறும் பால் மட்டும் வைத்துச் செய்யலாம் அல்லது வெறும் தீர்த்தத்தினால் மட்டும் நித்யம் திருவாராதனைச் செய்து, விசேஷ நாட்களில் மட்டும் பால் வைத்து திருமஞ்சனம் பண்ணுவது என்பது வழக்கம்.
பெரியவர்கள் வழக்கப்படி, நித்யமும் தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து, வெள்ளிக்கிழமை போன்ற மற்ற விசேஷ நாட்களில் பாலால் திருமஞ்சனம் செய்வார்கள்.
மற்றபடி தயிர், தேன் இதெல்லாம் விசேஷமாக உபயோகிப்பது என்பது வழக்கத்தில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top