ஶ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாமா? ஆமெனில் எவ்வாறு ஆராதிப்பது? இல்லையெனில் அகத்தில் இருக்கும் சங்கை எவ்வாறு உபயோகிப்பது?

ஸ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாம். சங்கத்திற்குத் தனியாக ஆராதனம் செய்யவேண்டிய அவசியமில்லை. நாம் சாதாரணமாக வாங்கியிருக்கக்கூடிய வலம்புரி சங்கு முதலானவையாக இருந்தால், அந்தச் சங்கத்தை சுத்தமாகவைத்து எம்பெருமானுக்குத் திருவாராதனம், திருமஞ்சனம் எல்லாம் செய்யலாம்.
சில சமயம் விசேஷமாக சங்கு சக்ரம் சுதர்ஶன பாஞ்சஜன்யம் ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை எல்லாம் செய்வார்கள். அது விசேஷ விதி. அவர்களுக்கு நித்யம் திருவாராதனை எல்லாம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top