எங்கள் பெற்றோர்கள் இருவரும் பரமபதித்துவிட்டார்கள். எங்கள் தமையனார் தான் கார்யங்களைச் செய்து வந்தார். தற்போது அவரும் பரமபதித்துவிட்டதால், பெண்களாகிய நாங்கள் வருடாவருடம் பெற்றோர்களுக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? மேலும் பரமபதித்த எங்கள் தமையனார் ஒரு ப்ருஹ்மச்சாரி, உடன் பிறந்தவர்கள் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? பெற்றோர்கள் இல்லாத, ஒரு திருமணமாகாத ஸ்திரீக்கு யார் அந்திமகார்யம் செய்யலாம்?

தமையனார் பரமபதித்துவிட்டபடியால் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்தான் கர்த்தா. அவருடன் அது முடிந்துவிடும். அதனால் ஶ்ராத்தம் செய்யவேண்டாம்.
மேலும் தமையனார் அவருக்கு வேறு யாரும் இல்லாதபடியினாலே, அவர்கள் உடன் பிறந்தவர்கள் என்கின்ற முறையில் நீங்கள் ஶ்ராத்தம் செய்யலாம். ஸ்த்ரீகளிடமிருந்து கைப்புல் வாங்கிக்கொண்டு மற்றவர்கள் செய்யவேண்டும்.
பெற்றோர்கள் இல்லாத, ஒரு திருமணமாகத ஸ்த்ரீக்கு அந்திம கார்யம் கூடபிறந்தவர் செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் வேறு யாராவது செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top