வஸ்த்ரம் உடுத்திக்கொள்ளும்பொழுது பூணூலை காதில் வைத்துக் கொள்ளவேண்டும். வஸ்த்ரம் உடுத்திக் கொண்டவுடன் கைகால் அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு திருமண் இட்டுக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், பூணூல் காதில் இருக்கும் பொழுது திருமண் இட்டு கொள்ளக்கூடாது. பூணூலை கால் அலம்பிய பின் தான் மாற்றிக்கொள்ள முடியும். அதனால் வஸ்த்ரம் உடுத்தியவுடன் , கை கால் அலம்ப வேண்டும், பூணூலை நேரே போட்டுக்கொள்ள வேண்டும், ஆசமனம் பண்ண வேண்டும், அதன் பிறகு திருமண் இட்டுக்கொள்ள வேண்டும்.