ஏகாதசி தினத்தன்று துளசிச்செடிக்கு நீர் சேர்க்கலாமா? அடியேனின் தோழி ஒருவர் ஏகாதசியன்று துளசியும் ஏகாதசி வ்ரதம் இருப்பதாகவும், ஆகையால் நீர் சேர்க்கக்கூடாது என்று சொன்னார் அதனால் ஏற்பட்ட சந்தேகம் அடியேன்.

ஏகாதசி தினத்தன்று துளசிச்செடிக்கு நீர் சேர்க்கலாம்.
குறிப்புகள்:
ஏகாதசியன்று துளசியும் ஏகாதசி வ்ரதம் இருப்பதாகவும், ஆகையால் நீர் சேர்க்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் சில காம்யமான காரியங்கள். புராணங்களில் அங்கங்கு சொல்லப்பட்டிருக்கும்.
நம்மை பொறுத்தவரையில் துளசி, பெருமாளுடைய திருவாராதனைக்கு நித்யம் உபயோகப்படுத்த வேண்டி இருக்கிறது. அதனால் காம்யமான வ்ரதம் சிலது இருந்தால்கூட நாம் அதைப் பின்பற்ற வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top