ஒரு வருடத்தில் எந்தெந்த மாதத்திலும், ஒரு வாரத்தின் எந்தெந்தக் கிழமைகளிலும் வபனம் செய்யக்கூடாது என்று தெளிவுபடுத்தவும். அடியேன். தற்சமயம் அடியேன் யதாமதிக்கு எட்டியபடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாஸை, பௌர்ணமி, ஏகாதசி,துவாதசி மற்றும் பெற்றோர்களுக்கு ஶ்ராத்தம் வரும் அந்த முழு பக்ஷத்திலும், மார்கழியிலும் பண்ணுவதில்லை.

அவரே சில தினங்களைச் சொல்லி இருக்கின்றார் அந்தத் தினங்கள், மேலும் மொத்தமாக பார்த்தால்
மாதங்களில் :
ஆடி, மார்கழி, மாசி, புரட்டாசி இந்த நான்கு மாதங்களும் பண்ணிக் கொள்ளக்கூடாது. புரட்டாசியில் பூர்த்தியாகவே பண்ணிக்கொள்ளக் கூடாது.
ஆடிமாதத்தில் முன்பாதியில் பண்ணிக்கொள்ளலாம்; பின்பாதியில் வபனம் செய்துகொள்ளக்கூடாது.
மார்கழியிலும் மாசியிலும் பின்பாதியில் பண்ணிக்கொள்ளலாம் முன்பாதியில் பண்ணிக்கொள்ள கூடாது என்பதாகச் சொல்லுவார்கள்.
கிழமைகளில்:
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தினங்களில் வபனம் செய்து கொள்ளக்கூடாது.
வெள்ளிக்கிழமை மாத்ருவுக்கு ஆகாது என்ற படியால், சிலர் மாதா இல்லை என்று பண்ணிக் கொள்கின்றனர். அது இரண்டாம் பக்ஷம்.
திதியில்:
பித்ரு திதிகள் அதாவது கிருஷ்ண பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி இவையெல்லாம் கூடாது. பொதுவாகவே சதுர்த்தி கூடாது. எந்த சஷ்டி திதியுமே அடியோடு கூடவேகூடாது என்பதாக நிஷித்தம்.
நட்சத்திரங்களில்:
பரணி க்ருத்திகையில் பண்ணிக்கொள்வதில்லை. ஏனென்றால் இது மங்களகார்யம் என்பதால். அவரவருடைய ஜன்ம நட்சத்திரத்திலும் சிலர் செய்துகொள்ள மாட்டார்கள்.
திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விசேஷமாக உள்ளது. அதனால் ஓரிரண்டு குறைவு இருந்தால் கூட அன்று வபனம் செய்து கொள்ளலாம் என்பதாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top