ஆசமனம் செய்யும் போது கைகால்களை அலம்பிக்கொண்டு குக்குடாசனம் என்று சொல்லக்கூடிய ஆசனமுறையில் உட்கார்ந்துகொண்டு கிழக்கோ, வடக்கோ பார்த்துக்கொண்டு செய்யணும். கொஞ்சமாக ஜலம் எடுத்துக்கொண்டு அச்சுதாய நம: அனந்தாய நம: என்பதாகச் சொல்லி ப்ராசனம் முதலானது எல்லாம் செய்ய வேண்டும். இவையே முக்கியமான நியமங்கள். மூன்று தடவை ப்ராசனம் செய்தவுடன் வாயை துடைத்துக்கொண்டு கையை அலம்பி சுத்தி செய்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் ஆஹ்நிக க்ரந்தங்களில் பார்க்கலாம்.
எப்பொழுது செய்ய வேண்டும் என்றால் நிறைய சமயங்களில் செய்ய வேண்டி இருக்கின்றது. கர்மாவிற்கு அங்கமாக ஆரம்பத்தில் நடுவில் முடிவில் என்று செய்யவேண்டிவரும். அது தவிர நமக்கு ஆகாரத்திற்கு முன்னும் பின்னும் ஆசமனம் செய்ய வேண்டும். அது மாதிரியாக நாம் சங்கா நிவ்ருத்தி பண்ணிக் கொண்டோமானால் வாயை துடைத்து உடனே கைகால் அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும். மற்றபடி அந்தந்தக் கர்மாவிற்கு அங்கமாக அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தமாகக் கோவிலுக்குப் போகவேண்டும் என்றால் ஆசமனம் பண்ணிவிட்டுப் போகவேண்டும் என்பதாகச் சொல்வதுண்டு அதெல்லாம் முடியுமானால் செய்யலாம்.