நித்யப்படி திருவாராதனை காலத்தில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணினுன்சிறுத்தாம்பு, இராமானுஜ நூற்றந்தாதி, ந்யாஸ தஶகம், அடைக்கலப்பத்து, பிள்ளையந்தாதி, ஆசார்யர்கள் தனியன் இவை எல்லாம் சேவிப்பதாகச் சொல்லி இருக்கிறார். இப்பொழுதெல்லாம் நித்யப்படி இத்தனையும் சேவிப்பவர் யாருமே கிடையாது.