ஆசார்யன் பொன்னடிசாற்றிக் கொடுத்த பாதுகைகளை ஏளப்பண்ணி வந்துள்ளேன். ஆத்தில் அந்தப் பாதுகைகளை எதில் ஏளப்பண்ண வேண்டும். தினமும் செய்ய வேண்டிய ஆராதனை (பாதுகைகளுக்கு) என்ன என்பதையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன் . ஊர்களுக்கு போகும்போது பாதுகைகளை ஏளப்பண்ணிக்கொண்டு போகவேண்டுமா? அடியேன்

சங்கல்பம் செய்து பாதுகைக்கு திருமஞ்சனம் பண்ணி, பழம் முதலானவைகளை சமர்ப்பித்து பாதுகா ஆராதனம் செய்யலாம். தினமும் செய்ய வேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது என்பதாகச் சொல்லப்படுகிறது. விசேஷ நாட்களில் செய்யலாம்.
தினமும் செய்தால் விசேஷம் என்று ஸ்ரீமத் ஆண்டவன் சம்பிரதாயத்தில் தினமும் செய்வதாக இருக்கின்றது. அப்படி இல்லாவிட்டால் விசேஷ நாட்களில் திருவாராதனம் செய்தால் போதும்.
ஊருக்குச் செல்லும் சமயங்களில் பாதுகைகளை ஏளப்பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது. மிகவும் அத்யாவச்யம் எனும் போது, உ.தா திருநக்ஷத்ரங்கள் முதலானவை வந்தால் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம். ஆனால் சுத்தமாக ஏள‌ப்பண்ணிக்கொண்டு போகவேண்டும். பெருமாளுக்கு என்ன சுத்தியோ அதே போல் இவருக்கும் அதே சுத்தியோடு ஏளப்பண்ணக்கொண்டு போகவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top