அடியேன். ஜனனமரண தீட்டு விஷயத்தில் அடியேனுக்கு ஒரு சந்தேகம். தசராத்ரி ஞாதிகள் என்பவர்கள் தன்னுடைய தலைமுறையும் தனக்கு முன் உள்ள 6 தலைமுறைகளையும் (மொத்தம் 7 தலைமுறைகள்) சேர்ந்தவர்கள். த்ரிராத்ரி ஞாதிகள் என்பவர்கள் தனக்கு அடுத்த 7 தலைமுறைகளை சேர்ந்தவர்கள். தனக்கும் தன்னுடைய முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு (தசராத்ரி ஞாதிகள்) ஜனன மரண விஷயத்தில் 10 நாட்களும், தனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுடைய ஜனன மரண விஷயத்தில் 3 நாட்களும் தீட்டு. இது சரியா? தங்களின் விளக்கத்தைப் ப்ரார்த்திக்கிறேன். தன்யோஸ்மி.

ஏழு தலைமுறை வரை தசராத்ரி ஞாதிகள். மூன்று தலைமுறை வரை த்ரிராத்ரி ஞாதிகள். தசராத்ரி ஞாதிகளுக்கு 10 நாள் தீட்டு த்ரிராத்ரி ஞாதிகளுக்கு 3 நாள் தீட்டு என்று எல்லாம் சரியாக எழுதி இருக்கிறார். ஆனால் இவையெல்லாம் இறப்பு விஷயத்தில் பிறப்பு விஷயத்தில் ஓரிரண்டு வித்தியாசங்கள் உண்டு. அதை GSPK SUDARSANAM வெளியிட்ட “தீட்டு விவரங்கள்” எனும் புஸ்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top