திருவாராதனம் செய்வதற்குப் பகலில் மூன்றாவது காலம் என்று சொல்லியிருக்கிறார்கள். அபிகமன காலம், உபாதான காலம் ஆனபின் மூன்றாவது பாகத்தில் செய்யவேண்டும். அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும் பகலை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு அதில் மூன்றாவது காலமான இஜ்யா காலத்தில் திருவாராதனம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படிச் செய்யமுடியவில்லை என்றால் அந்தக்காலத்திற்கு முன்னர் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்கள், அதுவும் முடியாதவர்கள் சாயங்காலத்திலும் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தினமும் மாலை செய்வதென்பது கூடாது என்றைக்காவது ஒருநாள் உரிய நேரத்தில் செய்ய இயலாதபோது மாலை செய்யலாம்.