திருமலையில் கொடுக்கும் லட்டு பெருமாளின் ப்ரசாதம் என்பதாகச் சொல்லும் வழக்கம், ஆகையால் ஸ்வீகரிக்கலாம். கவுண்டர்களில் வரும் போது ஆசாரம் குறைவாக இருக்கும் அதனால் ஆசாரத்தைக் கடைபிடிப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை வரும். ஏனெனில், அது பெருமாளின் ப்ரசாதமாக நேராக வராமல், ப்ளாஸ்டிக் கவர், மேலும் பலர் தொட்டுத்தான் வரும் ஆகையால், ஆசாரம் கடைபிடிக்கவேண்டும் எனக் கொண்டு அதை ஸ்வீகரிக்காமல் இருக்கலாம்.