நமஸ்காரம் ஸ்வாமி. ப்ரபத்தி செய்து கொள்ளும்பொழுது (யாருக்கு ப்ரபத்தி செய்யப்படுகிறதோ) அந்த நபர் முழு மடியாகவும் ஆசாரமாகவும் இருப்பது அவசியமா? ப்ரபத்தியை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம் என்பதை அடியேன் அறிவேன். மேலும் திரௌபதி வேறு ஒரு ஸ்திதியில் இருந்த போது ப்ரபத்தி செய்துகொண்டாள். ப்ரபத்திக்கு முழு ஆசாரம் தேவையில்லையா ஸ்வாமி. அடியேன் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்கணும்.

ப்ரபத்தி செய்வதற்கு மடி ஆசாரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு அங்கம் கிடையாது என்றாலும் நான் விழுப்போடு, தீட்டோடு தான் பண்ணிக்கொள்வேன் என்று சொல்லமுடியாது. வேறு வழியில்லாது போனால் தான் அப்படி விழுப்போடு அல்லது தீட்டோடு பண்ணுவது வழக்கம்.
இதுவும் ஒரு நல்ல தர்மமானபடியால், முடிந்தவரை எந்தளவு ஆசாரமாக இருக்க முடியுமோ அப்படி இருந்து தீர்த்தாமாடி, 12 திருமண் இட்டுக்கொண்டு சுத்தமாக பண்ணிக்கொள்ள வேண்டும்.
தீட்டோடு பண்ணலாம் என்பதற்காக தீட்டுடன் பண்ணிக்கொள்ள கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top