ப்ரபத்தி செய்வதற்கு மடி ஆசாரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு அங்கம் கிடையாது என்றாலும் நான் விழுப்போடு, தீட்டோடு தான் பண்ணிக்கொள்வேன் என்று சொல்லமுடியாது. வேறு வழியில்லாது போனால் தான் அப்படி விழுப்போடு அல்லது தீட்டோடு பண்ணுவது வழக்கம்.
இதுவும் ஒரு நல்ல தர்மமானபடியால், முடிந்தவரை எந்தளவு ஆசாரமாக இருக்க முடியுமோ அப்படி இருந்து தீர்த்தாமாடி, 12 திருமண் இட்டுக்கொண்டு சுத்தமாக பண்ணிக்கொள்ள வேண்டும்.
தீட்டோடு பண்ணலாம் என்பதற்காக தீட்டுடன் பண்ணிக்கொள்ள கூடாது.