திருவாராதனம் என்பது மற்ற அனுஷ்டானங்கள் போல் அல்லாது எம்பெருமானின் திருமேனியை நாம் தொட்டுச் செய்யக்கூடிய விசேஷமான அனுஷ்டானம்.
அச்சமயம் எம்பெருமான் திருமேனியைத் தொட்டு திருமஞ்சணம் போன்றவையெல்லம் செய்வதனால் நாம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இங்கே எம்பெருமான் திருமேனியைத் தொடுவதினால் அசுத்தமாகத் தொட்டால் அது அபசாரமாகிவிடும். ஆகையால்தான் மடி வஸ்த்ரம் அணிய வேண்டும். மேலும் ஊர்த்வபுண்டரம் என்பதும் ஒருவித சுத்தியைத் தரக்கூடியது.
எனவே மடியோடு ஊர்த்வபுண்டரம் தரித்து திருவாராதனம் செய்வதே விசேஷம்.