ஹயக்ரீவ ஆராதனத்தின் பொழுது கொலு வைக்கக்கூடிய பல க்ருஹங்களில் லக்ஷ்மீ சரஸ்வதி பொம்மைகளும் இருக்கும். அந்தப் பொம்மைகளுக்கும் சேர்த்து புஷ்பம் சமர்ப்பிப்பது, அக்ஷதை சமர்ப்பிப்பது போன்ற உபசாரங்கள் எல்லாம் பண்ணுவது வழக்கத்தில் தான் இருக்கின்றது. சரஸ்வதி தேவி என்பவள் ஹயக்ரீவருக்கு அடியவள்தான்.
” दाक्षिण्यरम्या गिरिशस्य मूर्तिः
देवी सरोजासनधर्मपत्नी I
व्यासादयोऽपि व्यपदेश्यवाचः
स्फुरन्ति सर्वे तव शक्तिलेशैः॥ ”
என்று ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருப்பதனால் ,
சரஸ்வதியினுடைய சக்தி எல்லாம் ஹயக்ரீவருடைய சக்தியினுடைய லவலேஶத்திலிருந்துதான் வருகின்றது என்று ஸ்பஷ்டமாகவே இருக்கின்றது. அந்த ரீதியில் ஹயக்ரீவருடைய அடியவளாக அந்த உபசாரங்கள் எல்லாம் அவளுக்கு ஸமர்ப்பிப்பது தவறு இல்லை என்று தோன்றுகிறது. பல க்ருஹங்களில் இது வழக்கத்தில் இருப்பதும் தெரிகிறது.