ஆம், ப்ரம்ஹா மற்றும் சிவனுக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சொல்லியுள்ளது. ஸ்வாமி தேஶிகனும் ப்ரதம ஸ்ரீவைஷ்ணவன் என்பதாகக் குறிப்பிடுகிறார்.
அடியவர்க்கு அடியவர் என்று கேள்வியில் குறிப்பிட்டதுபோல் ஸ்தோத்ரம் இருந்தால் பண்ணலாம். வேதத்தில் சில மந்த்ரங்கள் இருக்கு, புராணத்திலும் அந்த மாதிரி சில ஸ்துதிகள் எல்லாம் இருக்கின்றது, நாம் அந்த மந்த்ரங்களையும், புராணத்தில் இருக்கின்ற ஸ்துதிகளையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அடியவர்களுக்கு அடியவர் என்று நினைத்து நாமாக ஸ்தோத்ரம் பண்ணுவதோ, நாமாக கோயில்களுக்குப் போய் சேவிக்கின்றதோ கூடாது. இதெல்லாம் ஒரு விதமான ஒரு பாதுகாப்புக்காக பண்ணியிருக்கிறார்கள். அதாவது புத்திமாறிப் போய்விடக் கூடாது. நாராயணனே பரதத்துவம் என்பதில் நமக்கு எந்த விதத்திலுமே கொஞ்சம்கூட சமரசமே இருக்கக்கூடாது. அதனால் இதிஹாச புராணங்களில் வேதங்களில் எந்த அளவு நமக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்களோ அதைமட்டும் நாம் செய்தால் போதும். மற்றது எதுவும் செய்யவேண்டியது இல்லை.
புராணத்தில் நாராயணன்தான் பரதத்துவம் என அவர்கள் காட்டுகிறார்கள் என்றுதான் இருக்கின்றது. கொஞ்சம் மெதுவாக காட்டுவார்கள். உடனே காட்டிக்கொடுக்க மாட்டார்கள். 7/8 ஜன்மம் அல்லது பல ஜன்மங்கள் எடுத்த பின்பு எம்பெருமானிடத்தில் சேர்த்து விட்டு விடுவார்கள் என்று இருக்கின்றது. பல புராணங்களில் இந்த விஷயம் இருக்கின்றது. எத்தனையோ ஜன்மத்தில் ருத்ரனுடைய பக்தனாக இருந்தவர், பிறகு பெருமாளுடைய பக்தனாக மாறியிருக்கிறார் என்றெல்லாம் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. அவரவரின் ஶ்ரத்தைக்கெல்லாம் ஏற்றார் போல், அததற்கான முறை என்று ஒன்று இருப்பதனால அவர்கள் உடனடியாக காட்டாமல் மெதுவாகத்தான் செய்வார்கள்.