அல்ப த்வாதசி காலங்களில் மாத்யாஹ்நிகம் செய்த பிறகுதான் பாரணை பண்ணவேண்டுமா? (காலம் அவசியம் இல்லையா)

ஆம் அல்ப த்வாதசி காலங்களில் மாத்யாஹ்நிகம் செய்த பிறகுதான் பாரணை பண்ணவேண்டும் என்று இருக்கிறது. அதனால் அன்று சூர்யோதயத்திற்குப் பின் சந்த்யாவந்தனம், மாத்யாஹ்நிகம் எல்லாம் பண்ண முடிந்தால் வேகமாக அவற்றைப் பண்ணிவிட்டு சாப்பிடலாம். அப்படி இல்லாவிட்டால் கூட மாத்யாஹ்நிகத்தை முன்னாடியே பண்ணிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்று இருக்கின்றது.
ஒருவேளை காலம் தவறி சூர்யோதயத்திற்கு முன்னே மாத்யாஹ்நிகம் பண்ண வேண்டும்படி ஏற்பட்டுவிட்டால், மாத்யாஹ்நிகம் சமயத்தில் மறுபடியும் பண்ண வேண்டும் என்று ஒன்றும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top