வெளிநாட்டில் வசிப்பதனால் என் தாய் தந்தையற்கு ஶ்ராத்தம் பண்ண சரியான வசதி கிட்டாதனால் சிரமமாக இருக்கிறது. இந்தியா வரும் போது அவர்களின் ஶ்ராத்த திதியன்று எந்த மாதத்திலும் பண்ணலாமா அல்லது அந்த மாதம் அந்த திதியில்தான் பண்ணவேண்டுமா? என்னால் அவர்கள் பரமபதித்த திதியன்று இந்தியா வரஇயலவில்லை.

மாற்றிப் பண்ணுவதற்கான சலுகையை ஶாஸ்த்ரம் கொடுக்கவில்லை. ஶ்ராத்தம் என்பது ஶ்ரத்தையாகச் செய்யவேண்டும். அது என்றைக்கு வருகிறதோ அன்றுதான் செய்யவேண்டும்.
அன்று பண்ணமுடியாமல் தீட்டு வந்துவிட்டால், தீட்டு போகும் அன்று பண்ணவேண்டும். ஒருகால் மறந்துவிட்டால் பண்ணவேண்டும் என்று அதற்கும் ஒரு நாள் சொல்லியிருக்கு. இவை தவிர நாமே ஒருநாள் செய்வதற்கு ஶாஸ்த்ரம் அனுமதி கொடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top