கைசிக ஏகாதசி அன்று ப்ரபத்தி ஆனவர்களுக்கு ஷஷ்டியப்தபூர்த்தி வந்தால் என்ன செய்வது? அடியேனுடைய நாத்தனார் பேரன்களுக்குக் கைசிக ஏகாதசி அன்று யஜ்ஞோபவீதம் (பூணூல்) போடுகிறார்கள். அடியோங்கள் தாய்மாமா மாமி, ப்ரபத்தி ஆனபடியால் அன்று போஜனம் செய்ய இயலாது. பல வைஷ்ணவ கல்யாண விசேஷங்களில் அவா குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே போஜனம் செய்ய மடி தளிகை‌செய்து சிலரை போஜனம் பண்ணச் சொல்லுகிறார்கள். மற்றவர்களை விட்டு விடுகிறார்கள். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று பொதுப்பந்தியில் போஜனம் செய்ய நிர்பந்தம் ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன என்பதை ப்ரார்த்திக்கிறேன்.

ஏகாதசி அன்று பொதுப்பந்தியில் போஜனம் பண்ணாமல் இருப்பதுதான் சரி. எக்காரணமாகிலும் போஜனம் செய்யக்கூடாது. அவர்கள் நிர்பந்தமாக பண்ணால், ஏகாதசியன்று சாதம் சாப்பிடமுடியாது என்றும், எம்பெருமானுக்கு அம்சை பண்ணாததைச் சாப்பிடமுடியாது என்று, நாமும் அதைவிட நிர்பந்தமாக சொல்லவேண்டும். இவ்விஷயத்தில் அவர்களுக்காகத் தயங்கி ஒரு முடிவு எடுக்கவேண்டாம் என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கு. ஆகையால் தாராளமாக சாப்பிடமுடியாது என்று சொல்லி அன்று நாம் என்ன செய்யவேண்டுமோ அதற்கேற்றார் போல் செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top