ஏகாதசி அன்று பொதுப்பந்தியில் போஜனம் பண்ணாமல் இருப்பதுதான் சரி. எக்காரணமாகிலும் போஜனம் செய்யக்கூடாது. அவர்கள் நிர்பந்தமாக பண்ணால், ஏகாதசியன்று சாதம் சாப்பிடமுடியாது என்றும், எம்பெருமானுக்கு அம்சை பண்ணாததைச் சாப்பிடமுடியாது என்று, நாமும் அதைவிட நிர்பந்தமாக சொல்லவேண்டும். இவ்விஷயத்தில் அவர்களுக்காகத் தயங்கி ஒரு முடிவு எடுக்கவேண்டாம் என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கு. ஆகையால் தாராளமாக சாப்பிடமுடியாது என்று சொல்லி அன்று நாம் என்ன செய்யவேண்டுமோ அதற்கேற்றார் போல் செய்துகொள்ளலாம்.