சுபக்ருது ஐப்பசி மாதம் அடியேன் கேட்டகேள்வியின் தொடர்ச்சி. பஞ்சாங்கமே ப்ரதானம் ஆகையால் சந்திரனைப் பார்க்க முடியாவிட்டாலும் க்ரஹணகாலத்தை அனுசரித்து தர்ப்பணம் பண்ணவேண்டும் என்று வித்வான்கள் பதிலளித்திருந்தனர்.அடியேனின் கேள்வி, இது விமோசன ஸ்நானத்திற்கும் பொருந்துமா? அதாவது மேகமூட்டமாக இருந்து சந்திரனைப் பார்க்க முடியாமல் போனாலும் விமோசன ஸ்நானம் செய்யவேண்டுமா? உ.தா: ஜூலை 28,2018 அன்றைய சந்திரக்ரஹண காலம் 3.49am தொடங்கி விமோசனம் 6.21am ஆனால் காலை சந்திரனை காணமுடியவில்லை. இப்படிப் பட்ட நேரத்தில் காலை விமோசன ஸ்நானம் செய்துவிட்டு நம் நித்யகர்மானுஷ்டானங்களைத் தொடரலாமா? அல்லது அன்று மாலை சந்திரன் தெரியும்வரை காத்திருந்துதான் மேலே நித்யகர்மாக்களைச் செய்யவேண்டுமா?

சூர்ய க்ரஹணமானாலும், சந்திர க்ரஹணமானாலும் க்ரஹணம் விட்டபின் சூர்யனையோ, சந்திரனையோ பார்த்துவிட்டுதான் விமோசன ஸ்நானம் பண்ணவேண்டும் என்பது பொதுவிதி.
சில சமயம் க்ரஹணம் விட்டபின் அல்லது விடும்சமயம் அவர்கள் அஸ்தமனித்து விடுவார்கள், அந்நேரத்தில் அவர்களைப் பார்ரக்கமுடியாது. இதுபோன்ற நேரத்தில் மறுபடியும் அவர்கள் உதிக்கும்வரை காத்திருந்து அவர்களைப் பார்த்துவிட்டுதான் சாப்பிட வேண்டும்.
வேறுசில சமயம் உதயசமயத்தில் மேகமூட்டம், மழைக்காரணமாக ஒருவேளை சூர்ய, சந்திரனைப் பார்க்கமுடியாமல் போனால் அவர்கள் உதயமாகியிருப்பார் என்று பஞ்சாங்கம் துணைக்கொண்டும், மேலும் அவர்களின் ப்ரகாசம் நமக்குத் தெரியுமல்லவா அதைக்கொண்டும் விமோசன ஸ்நானம் பண்ணலாம் என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top