சூர்ய க்ரஹணமானாலும், சந்திர க்ரஹணமானாலும் க்ரஹணம் விட்டபின் சூர்யனையோ, சந்திரனையோ பார்த்துவிட்டுதான் விமோசன ஸ்நானம் பண்ணவேண்டும் என்பது பொதுவிதி.
சில சமயம் க்ரஹணம் விட்டபின் அல்லது விடும்சமயம் அவர்கள் அஸ்தமனித்து விடுவார்கள், அந்நேரத்தில் அவர்களைப் பார்ரக்கமுடியாது. இதுபோன்ற நேரத்தில் மறுபடியும் அவர்கள் உதிக்கும்வரை காத்திருந்து அவர்களைப் பார்த்துவிட்டுதான் சாப்பிட வேண்டும்.
வேறுசில சமயம் உதயசமயத்தில் மேகமூட்டம், மழைக்காரணமாக ஒருவேளை சூர்ய, சந்திரனைப் பார்க்கமுடியாமல் போனால் அவர்கள் உதயமாகியிருப்பார் என்று பஞ்சாங்கம் துணைக்கொண்டும், மேலும் அவர்களின் ப்ரகாசம் நமக்குத் தெரியுமல்லவா அதைக்கொண்டும் விமோசன ஸ்நானம் பண்ணலாம் என்று தோன்றுகிறது.