இருவரும் ஆசார்யர்கள்தான், ஆனால் கூட ஸம்ப்ரதாயத்தில் அபிப்ராய பேதம் என்பது நிறைய வந்து விட்டபடியால், தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஸ்வாமிதேஶிகன் சொன்ன சில தர்மங்கள், சில அனுஷ்டானங்கள் மணவாளமாமுனிகள் ஏற்கவில்லை என்று இருக்கிறது. அதே போல் அவரின் பக்ஷம் நம் தேஶிக பக்ஷத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்காரணத்தில் பொதுவாக ஆழ்வார் ஆசார்யர்கள் திருநக்ஷத்ரத்தின் போது இருக்கும் ஒரு ஶ்ரத்தை இங்கே குறைகிறதே தவிர, த்வேஷம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. கொண்டாடவே கூடாது என்றெல்லாம் இல்லை.
மணவாளமாமுனிகள் சில க்ரந்தத்தில் தூப்புல் பிள்ளை அருளிச்செய்வார் என்று ஸ்வாமி தேஶிகனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஸ்வாமி தேஶிகன், மணவாளமாமுனிகள் பற்றி குறிப்பிட வாய்ப்பில்லை ஏனென்றால் அவர் மாமுனிக்கு முன்னரே இருந்தவர்.