பாதுகா ஸஹஸ்ரநாமம் ஸ்தோத்ரம் எப்போது வேண்டுமானாலும் சேவிக்கலாம். பாதுகா ஆராதனம் என்பது பெருமாள் திருவாராதனம் போல் சுத்தமாக இருந்து பண்ணவேண்டியது. பெருமாள் திருவாராதனம் காலையில் எப்படிச் சுத்தமாக இருந்து பண்ணவேண்டுமோ அப்படித்தான் பண்ண வேண்டும். மாலையில் அந்தச் சுத்தி இருக்காது. மேலும், பொதுவாக காலையில்தான் பண்ணுவார்கள் மாலையில் பண்ணும் வழக்கமில்லை.