பெருமாள் திருவாராதனம் மாத்யானிகம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா?

பெருமாள் திருவாராதனம் மாத்யானிகம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா என்றால் அதுதான் அதற்கு சமயம். அதாவது அனுஷ்டான க்ரமப்படியாக மாத்யானிகத்திற்குப் பிறகுதான் திருவாராதனம் பண்ணவேண்டும்.
வேறு காரணங்களால் ஒருவேளை திருவாராதனம் முன்னாடி பண்ணும்படி நேர்ந்தால், மாத்யானிகத்திற்கு முன் அபிகமன ஆராதனத்தை விசேஷனமாக பண்ணிவிட்டு, மாத்யானிகத்திற்குப் பின் சுருக்கிப் பண்ணலாம் என்று கூறுகிறார்கள்.
பொதுவாக க்ருஹஸ்தர்காள் அபிகமன ஆராதனத்தைச் சுருக்கமாக பண்ணுவார்கள், அதாவது பெருமாளுக்குச் சுப்ரபாதம், சில ஸ்தோத்ரங்கள் சொல்லி சுருக்கமாகப் பண்ணுவார்கள். பின் இஜ்யாராதனத்தைப் பெரியதாகப் பண்ணுவார்கள். ஸந்யாசிகள் அபிகமனத்தைச் விசேஷமாகப் பண்ணி, இஜ்யாராதனம் சுருங்கலாம்.
க்ருஹஸ்தர்களுக்கு சில காலவிசேஷத்தின் போது, அதாவது நேரமில்லாத போது (ஆபத்காலம் என்று சொல்வார்கள்) அபிகமனத்தைச் விசேஷமாகப் பண்ணிவிட்டு, இஜ்யாராதனத்தைச் சுருக்கிக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top