மார்கழி மாதத்தில் காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானத்தில் முக்கியமானது காலையில் எழுந்து திருப்பாவை சொல்வது. ஸ்த்ரீகள் கார்த்தால எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். மார்கழி மாதத்தில் பிம்மாலையில் விளக்கேற்றுவது விசேஷம். அதேபோல் திருப்பாவை அவசியம் அனுசந்தானம் பண்ணவேண்டும். திருவாராதனம் நடக்காத பக்ஷத்திலும் திருப்பாவை கட்டாயம் சேவிக்க வேண்டும். கோதாஸ்துதி தெரிந்தால் அதையும் சேவிக்கலாம்.