“ப்ரபன்னர் ராகவேந்த்ரர் ஶ்லோகம் சொல்லலாமா? மந்த்ராலயாத்திற்குப் போய்சேவிக்கலாமா? அவரை ஆசார்யனாக ஏற்கலாமா?

ப்ரபன்னர்கள் ராகவேந்த்ர ஸ்லோகம் சொல்லுவதோ , மந்த்ராலயம் போவதோ, ராகவேந்த்ரரை ஆசார்யனாக ஏற்றுக் கொள்வதோ, இவையெல்லாம் பண்ணக்கூடாது. ஓரான் வழியாக வந்த குருபரம்பரையில் இருக்கின்றவர்களே ஆசார்யர்கள். அந்தக் குருபரம்பரையில் இருக்கின்ற ஆசார்யன் ப்ரபத்தி செய்து வைத்தால்தான் அது ஸ்ரீமன் நாராயணனுடைய திருவடியில் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும். அதனால் அப்பேர்ப்பட்ட ஸதாசார்யனிடம் ப்ரபத்தி பண்ணிக் கொண்டவர்கள் அவரையும் அந்த ஆசார்யன் பரம்பரையில் வந்த எல்லா ஆசார்யாளை மட்டும்தான் ஆசார்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top