ஆசார்யனின் திருவத்யயனத்தை சிஷ்யன் விசேஷமாக கொண்டாட வேண்டும். அதாவது எப்படிப் புத்ரர்கள் தன் பிதாவிற்கு திருவத்யயனம் செய்கிறார்களோ, அதேபோல் நன்றாக விசேஷமாக கொண்டாடலாம். அப்படிக் கொண்டாடியே ஆக வேண்டும் என்கின்ற நிர்பந்தம் எதுவும் கிடையாது. அது இல்லாமல் நாம் சுருக்கமாக பண்ணுவதாக இருந்தால் சேவாகாலம், சாற்றுமுறை ஆசார்ய சம்பாவனை இவையெல்லாம் பண்ணி ஒரு ப்ராமண போஜனம் பண்ணி வைத்து தக்ஷிணை கொடுக்கலாம். இப்படிச் செய்வது வழக்கத்தில் உள்ளது நிறையபேர் இப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.