யாகசாலைக்குச் சென்றுதான் பாராயணம் பண்ண வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது என்பது முக்கியமான விஷயம். அதாவது ஸ்திரீகளுக்கு திவ்ய பிரபந்தம் சேவிக்க கூடிய அதிகாரம் இருக்கிறது. நன்றாக பல தடவை அனுபவித்துச் சேவிக்கலாம். அதைக் கோவிலுக்கு சென்றுதான் சேவிக்க வேண்டும், யாகசாலைக்குச் சென்று தான் சேவிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது. அதனால் யாகம் நடக்காத போது அங்குச் சென்று சேவிக்கலாமா என்றால் அப்படிச் சேவித்தே ஆகவேண்டும் என்று நினைக்க வேண்டாம் என்றுதான் பதில் சொல்லத் தோன்றுகிறது. அப்படியே சேவிக்கவேண்டும் என்றாலும் அங்கே இருக்கக்கூடிய அந்த நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கிக் கொள்ளவேண்டும். அது முக்கியம். ஆனால் இந்தக் காரியம் அங்குதான் சென்று செய்யவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. ஆத்திலேயே அனுபவக்ரமமாக எத்தனை முறை வேண்டுமானாலும் ஸ்த்ரீகள் திவ்ய ப்ரபந்தத்தை பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்த்ரீகள் சொல்வதைப் பற்றி நிறைய விளக்கங்கள் சுதர்சனத்தில் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.