ஸ்த்ரீகளுக்கு, பரிசேஷணத்திற்கு இணையாக ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் உட்கொள்ளும் எதுவாக இருந்தாலும் அது நம் அந்தர்யாமிக்கு ஒரு நிவேதனமாக நினைத்துக்கொண்டு உண்ணும் பாவம் இருக்கவேண்டும். அதனால் கோவிந்த திருநாமத்தைச் சொல்லிவிட்டு சாப்பிடுவது நல்லது. ஸ்த்ரீகள், குழந்தைகள் எல்லாருமே முதல் பிடியை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் போது கோவிந்த கோவிந்த கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.