க்ருஹங்களில் புருஷர்கள் திருவாராதனம் செய்துவிட்டு அலுவலகத்திற்குச் சீக்கிரம் கிளம்பிச் சென்றுவிட்டால், அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள், குழந்தைகள் மற்றும் அகத்தில் இருக்கும் பெரியோர்களுக்கும் பெருமாள் தீர்த்தம் சாதிக்கலாமா?

க்ருஹத்தில் இருக்கின்ற புருஷர்கள் திருவாராதனம் பண்ணிவிட்டு சீக்கிரம் கிளம்பிவிட்டால், ஆத்தில் இருக்கின்ற குழந்தைகளுக்கு அந்த க்ருஹணியானவள் அவசியம் பெருமாள் தீர்த்தம் கொடுக்கலாம். பெரியோர்களுக்கும் கொடுக்கலாம் என்றுதான் தோன்றது. ஏனென்றால் பொதுவாகப் புருஷர்கள் பரிசேஷனம் பண்ணுவதற்க்கு முன் பெருமாள் தீர்த்தம் சாதிக்கிறது வழக்கம். சாதம் சாதிக்கும் பொழுது ஸ்த்ரீகள்தான் அந்தப் பெருமாள் தீர்த்தத்தைச் சாதிக்கிறார்கள். அதனால் இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படும்போது, அதாவது அகத்துப் புருஷன் அலுவலகத்திற்குச் சீக்கிரம் கிளம்பிப் போய்விட்டால், பெரியோர்களுக்கும் அந்த ஸ்த்ரீயானவள் பெருமாள் தீர்த்தம் சாதிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top