ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பெரியோர்கள் அனுஷ்டானத்தைப் பார்த்தால் ஸ்த்ரீகள் கருகமணி சேர்த்துக் கொள்வது கூடாது என்றில்லை என்பது தெரிகிறது . பெரிய பெரிய சுமங்கலிகள் எல்லாம் ஆபரணங்களில் கருகமணி சேர்த்து போட்டுக்கொண்டுள்ளதை அடியேன் பார்த்ததுண்டு, சேவித்ததுண்டு. பெரியோர்கள் கருகமணி தரித்துக் கொள்கின்றனர். மங்கள சூத்திரத்தில் பொதுவாக தமிழ்நாட்டு ஸ்த்ரீகள் தரித்து கொள்வதில்லை. அது வழக்கத்திலும் இல்லை. ஆனால் கருகமணி நிஷேதம் அப்படி என்று இல்லை என்று தான் தெரிகிறது.