நாம் அணிந்த தங்க நகைகளை, பெருமாளுக்குச் சாத்துவதற்கு முன் அதற்கென்று ஒரு தனி சுத்தி பண்ணுவது வழக்கம். நாம் அணிந்த தங்க நகையாக இருந்தால், புடம் போட்டு எடுப்பது போன்று ஒன்று செய்வார்கள், அக்னியில் காய்ச்சி எடுப்பது என்று சொல்வார்கள். அப்படிச் செய்துவிட்டு அதன் பின்னே பெருமாளுக்கு சாத்துவது என்று வழக்கம். ஏனென்றால் தங்கத்திற்கு அக்னியினாலே தான் சுத்தி. தங்கம் என்பது திரும்பத் திரும்ப அக்னியில் காய்ச்சப்பட்டு வேரொன்றாகச் செய்யப்பட்டுத்தான் நம் கைக்கு வருகிறது. அதனால் அந்த ரீதியில் அதைப் பண்ண வேண்டும். அதனால் கடைகளில் அப்படிப் பண்ணிக் கொடுச்சொல்லிக் கேட்டால் செய்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.