கல்யாணம் ஆகாத ஒருவர் பரமபதித்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அவருடைய தாயார் கைப்புல் வாங்கி மாஸ்யம் முதலியன நடைபெறுகிறது . ஒரு வருடம் முடிவதற்கு முன் அவருக்காக கயா ஶ்ராத்தம் பண்ணலாமா? தாயார் போகவில்லை. கயா போகும் ஒரு பந்துவைக் கொண்டு செய்யலாமா?

பொதுவாக ஆப்தீகம் நடந்துமுடியும்வரை கயாஶ்ராத்தம் பண்ணும் வழக்கமில்லை. ஆப்தீகம் முடிந்தபின்புதான் கயாஶ்ராத்தம் பண்ணப் போகவேண்டும் என்று இருக்கிறது. ஒரு வருடம் ஆனபின் கயாவிற்குப் போகும்போது ஒரு பந்துவைக்கொண்டு அங்குச் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top