கயா ஶ்ராத்தம் செய்யும்போது சில காய்கறிகள், பழங்களை நாம் விடுகிறோம். நாம் அங்கே விட்டுவிட்ட காய்கறியோ, பழமோ மடம் அல்லது கோவில்களில் ப்ரசாதமாகக் கொடுக்கும்போது நாம் அதை உட்கொள்ளலாமா? அல்லது ஏற்காமல் இருக்கலாமா? ஒருகால் அறியாமல் நாம் சாப்பிட்டிருந்தால் அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

கயா ஶ்ராத்தம் செய்யும்போது நாம் அங்கு விட்ட காய்கறிகளை, பழங்களை ப்ரசாதமாகக் கொடுத்தால்கூட அதை நாம் உட்கொள்ளக்கூடாது. தெரியாமல் உட்கொண்தடற்குத் தனியாக ப்ராயஶ்சித்தம் என்றெல்லாம் கிடையாது. தெரியாமல் உட்கொண்டுவிட்டோம் என்று புரிந்துகொண்டு நம்மனதளவில் அபராதக்ஷாபனம் பண்ணிக்கொண்டு இனிமேல் அவ்வாறு நடக்காமல் கவனமாக இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top