ஹனுமத் ஜயந்தி பற்றி கேள்வியில் கேட்டதுபோலேப் பல குறிப்புகள் இருக்கிறது. அதேபோல்தான் கருடஜயந்தியும் ஆடியில் என்று சொல்வதுபோல் தை/மாசியில் என்றும் சொல்லுவார்கள். ஆகையால் அந்தந்த இடங்களில் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அப்படியாக வைத்துக்கொள்வது. மேலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின்படி பல ஊர்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகையால் நாமும் அதையே பின்பற்றலாம். நம் பூர்வர்கள் இந்தத் தினம்தான் என்று ஒரு அனுஷ்டானத்தில் வைத்துக்கொள்ளாததினால் நம்மால் இதுதான் சரி என்று சொல்லமுடியவில்லை. பஞ்சாங்கத்தில் எப்படிப் போட்டிருக்கிறார்களோ வழக்கத்தில் எப்படியிருக்கோ அவ்வழக்கப்படி அதில் நம்பிக்கை வைத்து நாம் கட்டாயமாகச் செய்யலாம்.
ஹனுமத் ஜயந்திக்கோ, கருட ஜயந்திக்கோ வ்ரதம் என்றோ, விசேஷ திருவாராதனம் செய்வதென்று ஸம்ப்ரதாயத்தில் வரவில்லை. ஆனால் விசேஷ திருவாராதனம் செய்வதினால் தவறொன்றுமில்லை. மேலும் வ்ரதம் என்று கிடையாது அந்தந்த இடங்களில் எப்படிச் சொல்கிறார்களோ அதன்படி போய்ச் சேவிப்பதே விசேஷம்.