அனத்யயன காலத்தில் ஏன் க்ருஹங்களில் ப்ரபந்தங்கள் சேவிப்பதில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லாம்.
ஒரு சமயம் கலியன் ஆழ்வார்திருநகரியிலிருந்து திருவரங்கத்திற்கு எழுந்தருளப்பண்ணி ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை எம்பெருமான் முன்னர் சேவித்து அனுபவிக்கும்படியாக அத்யயன உத்ஸவம் என்று ஏற்படுத்தினார். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். மேலும் அத்யயன உத்ஸவ காலத்தில் ஆழ்வார் அத்யக்ஷத்தில் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை எம்பெருமான் முன்னர் விண்ணப்பிப்பது என்பது ஒரு உயர்ந்த அனுபவமாகும். எல்லாரும் ஏகாக்ரசித்தமாய் அந்த அனுபவத்தைப் பெற ஒரு வாய்ப்பாக இருக்கவேண்டி, க்ருஹங்களில் சேவிக்காமல் கோஷ்டியாக கோயில்களில் அனுபவிக்க ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
திருக்கோயில்கள் மட்டுமல்லாது, சில விக்ரஹ ஆராதனம் நடந்த க்ருஹங்களிலும் அத்யயன உத்ஸவாதிகளைப் பெரியோர்கள் நடத்தி வைத்ததாகத் தெரிகிறது.
மற்றொரு காரணமானது, அனத்யயன காலத்தில் திவ்யப்ரபந்தம் சேவிக்க முடியாதது என்பதினால் நம் பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளைக் கற்றுக்கொள்ளவும் அனுசந்திக்கவும் இது ஒரு உபயுக்த்தக் காலமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.