பொதுவாகவே ப்ராஹ்மணபோஜனம், ப்ரஹ்மச்சாரிகளுக்கு பிக்ஷை இடுவது இவையெல்லாம் க்ருஹஸ்த தர்மத்தில் உயர்ந்த காரியங்கள். தினமும் யாராவது அதிதிகள் போஜனம் செய்ய வருகிறார்களா என்று பார்த்து விட்டுத்தான் உண்ண வேண்டும் என்று க்ருஹஸ்த தர்மங்கள் எல்லாம் சொல்லுகின்றன. அப்படி இருக்கும்பொழுது ஒரு நாள் ப்ரஹ்மச்சாரிகளை கூப்பிட்டு போஜனம் இடுவது நல்ல காரியமாகத்தான் தெரிகிறது. அதில் ஒன்றும் தவறில்லை.
பரந்யாஸம் ஸமாஶ்ரயணமானவர்கள் இந்தக் காரியத்தைப் பண்ணலாம். ஆனால், குமார ஷஷ்டிக்காகச் செய்கிறேன். அதாவது ஒரு தேவதாந்தரத்திற்காகச் செய்கிறேன் என்கின்ற எண்ணமெல்லாம் கூடாது. எந்தக் காரியம் செய்தாலும் அது பகவத் ப்ரீத்யர்த்தமாக இருக்கவேண்டும் என்கின்ற எண்ணத்துடன் செய்தால் அதில் எதுவும் தவறில்லை.