திருக்கோவிலின் வெளியில் இருக்கும் கடைகளிலிருந்து திருத்துழாய் வாங்கி பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கின்றோம். அந்தப் பெருமாளின் திருத்துழாயை ஆத்துப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? குறிப்பாக என்றெல்லாம் திருத்துழாய் பறிக்கக்கூடாது என்றிருக்கிறதோ அன்றைய தினத்தில் அவற்றைச் சாற்றலாமா?

திருத்துழாய் பறிக்கக்கூடாத நாட்களில்கூட நாம் கடைகளில் வாங்கி ஸமர்ப்பிப்பது என்பது அத்தனை ஸ்வாரஸ்யமில்லை. என்றைக்கெல்லாம் நாம் திருத்துழாயை க்ரஹிக்கலாமோ அன்றே க்ரஹித்து வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்கள் உபயோகப்படுத்தலாம் என்றும், வாடிவிட்டாலும் பரவாயில்லை திருத்துழாய்க்கு வாசம் போகாது என்றும் சொல்லியிருக்கு. மேலும் கடையில் வாங்கி சமர்பிப்பது உத்தம கல்பமில்லை.
அந்தப் பெருமாளுக்குச் சமர்பித்ததை மீண்டும் அவருக்கே சமர்பிக்கலாம் ஆனால் வேறு பெருமாளுக்குச் சமர்பிப்பதைப் பற்றி தெளிவாகக் கூறப்படவில்லை. ஆகையால் கோவிலில் கொடுத்தது, கடையில் வாங்குவது என்பதைவிட முன்னமே நாம் க்ரஹித்துவைத்ததை சில நாட்கள் தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top