திருத்துழாய் பறிக்கக்கூடாத நாட்களில்கூட நாம் கடைகளில் வாங்கி ஸமர்ப்பிப்பது என்பது அத்தனை ஸ்வாரஸ்யமில்லை. என்றைக்கெல்லாம் நாம் திருத்துழாயை க்ரஹிக்கலாமோ அன்றே க்ரஹித்து வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்கள் உபயோகப்படுத்தலாம் என்றும், வாடிவிட்டாலும் பரவாயில்லை திருத்துழாய்க்கு வாசம் போகாது என்றும் சொல்லியிருக்கு. மேலும் கடையில் வாங்கி சமர்பிப்பது உத்தம கல்பமில்லை.
அந்தப் பெருமாளுக்குச் சமர்பித்ததை மீண்டும் அவருக்கே சமர்பிக்கலாம் ஆனால் வேறு பெருமாளுக்குச் சமர்பிப்பதைப் பற்றி தெளிவாகக் கூறப்படவில்லை. ஆகையால் கோவிலில் கொடுத்தது, கடையில் வாங்குவது என்பதைவிட முன்னமே நாம் க்ரஹித்துவைத்ததை சில நாட்கள் தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.