துவாதசியன்று அகத்தில் இருக்கும் ஆசார்யன் பாதுகைக்கு பாதுகாராதனம் பண்ணவேண்டும். அதாவது ப்ராணாயாமம் பண்ணி, இந்த ஆசார்யனுக்குப் பாதுகாராதனம் பண்ணுகிறேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு பாதுகைக்குத் திருமஞ்சனம் பண்ணவேண்டும். அந்த ஸ்ரீபாத தீர்த்தம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஸ்ரீபாதுகைக்கு அர்க்ய பாத்யங்கள் எல்லாம் சமர்பிக்கவேண்டும். புஷ்பம், சந்தனம், பழம் எல்லாம் சமர்பிக்கவேண்டும், தனியனைச் சேவிக்கவேண்டும். ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கிக்கொள்ள வேண்டும்.