பாகவத அபசாரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவரல்லாத பிற சந்யாசிகளுக்கும் பொருந்துமா?

பாகவத அபசாரம் என்றால் பகவத் பக்தர்களிடத்தில், பகவானுக்கு பக்தர்காளாக இருப்பவர்களிடத்தில் நாம் படும் அபசாரம்தான் பாகவத அபசாரமாகும். ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்களிடத்தில் நாம் படும் அபசாரத்திற்கு பாகவத அபசாரம் என்ற பெயர் வராது. இருப்பினும் பொதுவாகவே நாம் எந்த மனிதர்களிடத்திலும் தோஷத்தையும் பண்ணக்கூடாது என்றிருக்கிறது. அந்த ரீதியில் யாரிடத்திலும் நாம் தவறிழைக்கக்கூடாது, யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது ஒதுங்கி வருத்திக்கவேண்டும் என்று சொல்லுவதுண்டு.
மேலும் நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாத படியினால் த்ருண காஷ்டாதிகளைக் கண்டதுபோலே இருக்கவேண்டும். அதாவது மரம், புல் போன்றவற்றைக் கண்டால் இருப்பதுபோல் ஒதுங்கி இருத்தல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top