ஶ்ராத்தத்திற்கு முதல் நாள் ஒருபொழுது ஆனபடியினாலே ஒருவேளை மட்டும்தான் சாப்பிடவேண்டும். மேலும் அகத்திலுள்ள பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணி பரிசேஷணம் பண்ணி அந்த ப்ரசாதத்தை மட்டும்தான் சாப்பிடவேண்டும். அன்றைய தினம் தனியாக பெருமாள்ப்ரசாதம் வாங்கி சாப்பிடக்கூடாது. அகத்துப் பெருமாள் ப்ரசாதம் உட்கொள்ளும்போது அந்தச் சாதத்துடன் சேர்த்து சாபிட்டால் அதில் பெரிய தோஷமில்லை.
அன்றைய தினம் பரஅன்னம் கூடாது என்றிருக்கிற படியால், முடிந்த அளவு அகத்துப் பெருமாள் சாதம் சாப்பிட்டால் நல்லதென்று தோன்றுகிறது.