ப்ராஹ்மணர்கள் ஸாத்வீகமான ஆஹாரம்தான் சாப்பிடவேண்டும் என்ற நியமம் இருக்கிறது. இந்த நியமங்கள் எல்லாம் ஸ்ரீமத் பகவத் கீதையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. எவையெல்லாம் ஸாத்வீக ஆஹாரம் என்று, எது சாப்பிடவேண்டும் எவை நிஷேதிக்கவேண்டும் என்று ஶாஸ்த்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நம் மனதிற்கும், நம் ஆத்மாவிற்கும் பக்தியை, ஞானத்தை வளர்க்கக்கூடியதாகவும், பெருமாளுக்கு நிவேதனம் பண்ண உகந்ததாகவும், தோஷமில்லாததாகவும், அதிகமான கஷ்டம், அதிகமான மணம் (துர்நாற்றம்) இல்லாததாகவும் இருக்கவேண்டும் என்ற நியமங்கள் கூறப்பட்டுள்ளது. அந்த நியமங்களுக்கு உட்பட்டு பல வஸ்துக்கள் நிஷித்தமானவையாக இருக்கிறது அதில்தான் இவை இரண்டும் இருக்கிறது. குறிப்பாக வெங்காயம் சாப்பிடக்கூடாதென்று ஸ்பஷ்டமாகவே இருக்கிறது.