ஆசார்யன் கொடுத்த மந்த்ராக்ஷதையை தலையில் நித்யமே ஒருமுறை நாம் சேர்த்துக்கொள்ளலாம். மந்த்ராக்ஷதையில் சில மந்திரங்களெல்லாம் சேர்த்திருப்பார்கள் அதனுடன் ஆசார்யன் அனுக்ரஹமும் இருக்கும். ஆகையால் நித்யமே ஒருமுறை சிரசில் சேர்த்துக்கொள்ளலாம். கல்யாணம் போன்ற விசேஷத்தில் சிரசில் சேர்க்கலாம், ஆனால் அது காலில் படக்கூடாது, கால் படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கல்யாணத்தில் பொதுவாக எல்லாரும் அக்ஷதை இரைப்பது போல் மந்த்ராக்ஷதையை இரைப்பது உசிதமாக இருக்காது. ஆகையால் கல்யாணம் போன்ற விசேஷத்தில் சிறிதளவு எடுத்து நம் சிரசில் சேர்த்துக்கொள்ளலாமே தவிர பெரிய தட்டில் வைத்து இரைப்பது உசிதமில்லை.
அதேபோல் மந்த்ராக்ஷதையைக் கொண்டு பெருமாள் ப்ரசாதம் பண்ணுவதும் உசிதமாக இருக்காது. வேறுவழியே இல்லையென்றால் மட்டும் கால்படாத இடத்தில் சேர்த்துவிடலாம்.