ஸம்ப்ரதாயத்தில் பேதம் இருப்பது நமக்கே தெரிந்த விஷயம். ஸ்வாமி தேஶிகன் சாதித்திருக்கிறார், ஆகமங்களில் நான்கு முறை சேவிக்க வேண்டும் என்று ஸ்பஷ்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. பெருமாளுக்கு எதுவானாலும் இரட்டைப்படையில் இருக்கவேண்டும். பழம், வெற்றிலை சமர்ப்பித்தால் இரண்டாகச் சமர்ப்பிக்கவேண்டும். அதனால் ப்ரதக்ஷிணம், ப்ரணாமம் இவையெல்லாம் கூட இரண்டு தடவையாகப் பண்ணவேண்டும்.
ஆகமங்களில் பெருமாளுக்கு சமத்வம் என்று ஒன்று இருக்கின்றது. அந்த ரீதியில் அவருக்கு வைஷம்யம் கூடாது, அவர் எல்லோரையும் சமமாக பார்க்கின்றபடியினாலே, எண்களில் சமம் என்றால் இரட்டைப்படை, வைஷம்யம் என்றால் ஒற்றைப்படை. ஆகவே அந்த ரீதியில்தான் நாம் இரட்டைப்படையில் சேவிக்க வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்லியிருப்பது முதல் காரணம்.
ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் முதலான ஆசார்யர்கள் எல்லாம் அப்படி அனுஷ்டானம் பண்ணி இருப்பதினால் அந்த ரீதியில் நாம் அந்த ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றி பண்ணிக் கொண்டிருக்கிறோம்.