இன்றைய காலத்தில் மிக குறைந்த அளவே நித்ய ஔபாசனம் செய்கிறார்கள். இருப்பினும் அகத்தில் நடக்கும் உபநயனம், சீமந்தோன்னயனம் முதலிய மங்களகரமான விசேஷங்களுக்கு முன் ஔபாசனம் செய்கின்றார்கள். அந்தச் சமயம் இத்தனை நாட்கள் பண்ணாததற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டுமா?

ஆமாம் கண்டிப்பாக ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டும். ஔபாசனத்திற்கு முன் அக்னி சந்தானம் பண்ணும்பொழுது அதில் அந்த ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் அடங்கி இருக்கின்றன. தக்ஷிணா தானம், அரிசி தானம், முதலான ப்ராயஶ்சித்தங்கள், அதற்கான ஹோமங்கள் எல்லாமே இருக்கின்றன. வாத்யார்கள் அதைப் பண்ணி வைப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top