வேத கோஷ்டிக்கோ, பாராயண கோஷ்டிக்கோ, பெருமாள் சேவிக்கவோ ஆசார்யனை சேவிக்கவோ என எதற்கானாலும் சுத்தமாகதான் போகவேண்டும். தீட்டுடன் வந்து கலந்து கொள்ளக்கூடாது என்று இருக்கிறது. அதனால் அந்த ரீதியில் சொல்லியிருக்கிறார்.
பொது போக்குவரத்துகளில் பயணித்துவிட்டு செல்வதென்பது சரியில்லைதான். ஆனால் வேறு வழியில்லாதபோது, தீர்த்தமாடி விட்டாவது அல்லது மந்த்ர ஸ்நானம் அந்த மாதிரி ஏதாவது பண்ணி விட்டாவது போகலாம்.