ஸ்ரீ உ வே கண்ணன் ஸ்வாமி அவரது வேத வைபவம் உபந்யாஸத் தொடரில் ஒருவர் பேருந்து போன்ற போக்குவரத்தில் பயனித்துவிட்டுவந்தால் தீர்த்தமாடிவிட்டுதான் வேத கோஷ்டீக்குப் போகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்றைய காலத்தில் வேத பாரயணத்திற்குச் செலவதற்கே பொது போக்குவரத்துகளில் பயணிக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும் சமயத்தில் என்ன செய்வது?

வேத கோஷ்டிக்கோ, பாராயண கோஷ்டிக்கோ, பெருமாள் சேவிக்கவோ ஆசார்யனை சேவிக்கவோ என எதற்கானாலும் சுத்தமாகதான் போகவேண்டும். தீட்டுடன் வந்து கலந்து கொள்ளக்கூடாது என்று இருக்கிறது. அதனால் அந்த ரீதியில் சொல்லியிருக்கிறார்.
பொது போக்குவரத்துகளில் பயணித்துவிட்டு செல்வதென்பது சரியில்லைதான். ஆனால் வேறு வழியில்லாதபோது, தீர்த்தமாடி விட்டாவது அல்லது மந்த்ர ஸ்நானம் அந்த மாதிரி ஏதாவது பண்ணி விட்டாவது போகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top