1. ஸ்மார்த்த வைஷ்ணவ சம்பிரதாயம் எப்போது துவங்கின? ஆதிசங்கரர் தான் பிராமணர்களை இப்படி வகுத்தாரா? 2. அவரவர் கர்மாபடிதான் அனைத்தும் என்றால் அவன் சம்பிராதயம் விட்டு விலகி மணம் முடிப்பதும் அவனது விதியா? இதனை நம்மால் மாற்ற முடியுமா?

ஆதிசங்கரர் வகுத்தார் என்பது கிடையாது. ஏனென்றால் அவருக்கு முன்பே அத்வைத ஸம்ப்ரதாயம் என்று ஒன்று இருந்திருக்கிறது. அதேபோல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயமும் முன்பே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. யுகாந்தரங்களில் கலியுகத்திற்கு முன்கூட இந்த ஸம்ப்ரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் ஆதிசங்கரர் இதை மிகப்பெரிய அளவில் பரப்பி, ஆங்காங்கே மடங்கள் ஸ்தாபனம் செய்து சாதாரண ஜனங்கள் கூட அந்த ஸம்ப்ரதாயத்தை ஆஶ்ரயிக்கும் படியாக பண்ணி இருக்கிறார்.
அதே போல் நமது பகவத் இராமானுஜரும் முன்பே ஸ்ரீ வைஷ்ணவம் இருந்தால்கூட பெரிய அளவில் நிறைய பேர் ஸ்ரீ வைஷ்ணவர்களாக வாழும் படியாக அனுக்ரஹம் பண்ணி உள்ளார்.
எல்லாமே ஒரு விதிப்படி நடக்கிறது என்கின்ற படியினாலே, அவரவர் தலை எழுத்தின்படி நடக்கிறது. இதை மாற்றமுடியும். ஆசார்ய அனுக்ரஹம், பகவத் சங்கல்பம் இதெல்லாம் இருந்தால் மாறும். மாற முடியாது என்பது கிடையாது. அதைப் பற்றி ஶாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. அப்படி மாறிப்போனால்கூட இது அக்ஞாதசுக்ருதம் என்று சிலதெல்லாம் சொல்கிறார்கள். பகவான் ஏதோ ஒரு வழியில் திருத்துவதற்கு ரீதி இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார். உதாஹரணமாக ஆசார்ய கடாக்ஷம் வந்தாலே திருந்துவதற்கான வழி எல்லாம் கிடைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top