அன்றைய திதி வார நக்ஷத்ரங்கள் எல்லாம் மஹா சங்கல்பப்படி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு அன்றைய தினத்தில் அந்த க்ஷேத்திரத்தில் அந்தத் தீர்த்தத்தில் “கர்மண்ய கா சித்தர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சங்கல்பம் பண்ணி ஸ்நானம் பண்ண வேண்டும். அதே மாதிரியாக காவிரி முதலான நதிகளில் குளிக்கும் போது அந்தந்த க்ஷேத்ரத்தின் பெயரைச் சொல்லி அந்தந்த நதி பெயரையும் சொல்லி “கர்மண்ய கா சித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சொல்லாம்.
சிலர் தீர்த்த ஸ்நானம் விசேஷமாக பண்ணவேண்டும் என்று இருக்கிறபடியினால் காவேரி முதலான நதிகளில் தீர்த்த ஸ்தானம் பண்ணும் பொழுது முதலில் “கர்மண்ய கா சித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சொல்லி தீர்த்தமாடி விட்டு, அதற்குப் பின் காவேரி மகாநதியில் நான் ஸ்நானம் பண்ணுகிறேன் என்று தனியாக சங்கல்பம் பண்ணி தீர்த்தமாடுவார்கள்.
ஸ்த்ரீகள் தனியாகச் சங்கல்பம் பண்ணிக்கவேண்டுமென்று அவசியம் இல்லை. ஆனால் விசேஷ தினங்களில் அவர்களுக்கும் இதே மாதிரிதான் சங்கல்பம்.