அடியேனுக்குத் திருமணமாகியவுடனே ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. எங்கள் அகத்தில் அன்றெல்லாம் பெரிதாக ஸம்ப்ரதாய அனுஷ்டானங்கள் பின்பற்றியதில்லை. இன்று அடியேன் பரந்யாஸம் செய்ய ஆசைப்படுகிறேன். அச்சமயம் ஆசார்யன் மந்திரோபதேசம் செய்யமாட்டார் என்று கூறுகிறார்கள். அடியேன் எப்படி மந்திரோபதேசம் பெற்றுக்கொள்வது? எப்படி ஜபம் செய்யவேண்டும் என்பதை அறிய என்ன வழி?

ஸமாஶ்ரயண காலத்திலேயே மந்த்ர உபதேசம் எல்லாம் ஆகி இருக்கும். அதனால் வேறு யாராவது மகான்கள், நம் அகத்திலோ அல்லது பக்கத்து அகத்திலோ இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு அந்த மந்த்ரங்களை ஜபம் பண்ணலாம். அதற்குப் பின் ஆசார்யன் பரந்யாஸம் பண்ணி வைப்பார். அதுவே போதும்.
பரந்யாஸ காலத்தில் ஆசார்யன் மந்த்ர உபதேசம் பண்ணி வைக்க மாட்டார். ஆசார்யனிடமே இப்படி விஷயத்தை சொல்லி மந்த்ர உபதேசம் பண்ணி வைக்க விண்ணப்பிக்கலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. அவர் பண்ணி வைப்பார். அதனால் ஆசார்யனிடமோ, அல்லது யாராவது பெரியவாளிடமோ நீங்கள் மந்த்ரோபதேசம் பெற்றுக் கொள்ளலாம்.
ஜபம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் உபதேசம் பண்ணுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top