ஸமாஶ்ரயண காலத்திலேயே மந்த்ர உபதேசம் எல்லாம் ஆகி இருக்கும். அதனால் வேறு யாராவது மகான்கள், நம் அகத்திலோ அல்லது பக்கத்து அகத்திலோ இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு அந்த மந்த்ரங்களை ஜபம் பண்ணலாம். அதற்குப் பின் ஆசார்யன் பரந்யாஸம் பண்ணி வைப்பார். அதுவே போதும்.
பரந்யாஸ காலத்தில் ஆசார்யன் மந்த்ர உபதேசம் பண்ணி வைக்க மாட்டார். ஆசார்யனிடமே இப்படி விஷயத்தை சொல்லி மந்த்ர உபதேசம் பண்ணி வைக்க விண்ணப்பிக்கலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. அவர் பண்ணி வைப்பார். அதனால் ஆசார்யனிடமோ, அல்லது யாராவது பெரியவாளிடமோ நீங்கள் மந்த்ரோபதேசம் பெற்றுக் கொள்ளலாம்.
ஜபம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் உபதேசம் பண்ணுவார்கள்.