பிறந்தநாள் என்பதை நக்ஷத்திரப்படி கொண்டாடவேண்டும் என்றும், ஶ்ராத்த தினத்தை ஒருவர் திதி வைத்து கொண்டாட வேண்டும் என்றும் தர்ம ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி முதலானவைகளில் ஸ்பஷ்டமாகவே சொல்லி இருக்கிறது . அதனால் அந்த ரீதியில் கொண்டாடுகிறோம். நக்ஷத்திரம் என்பது குறையில்லாதது ந க்ஷரதி என்பதினால் நக்ஷத்திரம் என்கின்ற பெயர். குறை இல்லாமல் நாம் மேன்மேலும் வளரவேண்டும் என்பதற்காக வைத்திருக்கிறார்கள்.
மாதத்தில் திதி ஒன்றுதான். நக்ஷத்திரம் நிறைய குழப்பமாகலாம் என்கின்றதினாலும் இருக்கலாம். ஶ்ராத்த திதியை வைத்து பண்ணவேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்லி இருக்கிறது. அதனால் அனுஷ்டிக்கின்றோம்.